பார்த்தீனியம் நச்சு செடி...!
பார்த்தீனியம் நச்சு செடி...! 🍃 இந்த நச்சு செடி எல்லா விதமான சு+ழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன் உடையது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் நச்சு ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்த நச்சு செடியை ஒழிக்கும் முறையை பற்றி இன்றைக்கு பார்ப்போம். தன்மை : 🍃 இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவி இருந்தது. தற்போது விளை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது. 🍃 இந்த நச்சு செடி ஆண்டிற்கு 3 முறை வளரும் தன்மை உடையவை. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியில் இருந்து உற்பத்தி ஆகின்றது. இந்த விதைகள் அனைத்தும் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும். கால்நடைகள் : 🍃 கால்நடைகள் பார்த்தீனிய செடிகளை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. 🍃 எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும...