சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!
சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!
திரு அனிமல் கேர்,
🍁 நாட்டு மாடு வளர்க்கும் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது இல்லை.
🍁 அதை விட விலை மதிப்பில்லா பொருட்களை கால்நடைகள் தருகின்றன. அது தான் சாணம் மற்றும் கோமியம். அவற்றை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம்.
நாம் செய்ய வேண்டியவை :
🍁 பால் பண்ணை அமைக்கும் போது சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும்.
🍁 பின்னர் சாணமும், கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்க வேண்டும்.
🍁 நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் கோமியத்தை கம்பி வலை அமைத்து பிரித்து எடுத்து பஞ்சகாவ்யா மற்றும் இயற்கை பு+ச்சிகொல்லி மருந்து செய்து பயன்படுத்தலாம்.
🍁 அதே போல் சாணத்தை கோபர் வாயுவாக தயாரிக்க பயன்படுத்தலாம். ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும். அதிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்கவும் முடியும்.
🍁 சாணத்தை வைத்து நாம் கோபர் வாயு தயாரித்த பின், மிச்சம் உள்ள சாணத்தை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதனால் நமக்கு இயற்கை உரமான மண்புழு உரமும் கிடைக்கிறது.
🍁 மேலும் கோபர் வாயு தயாரிக்க பயன்படுத்தப்படும் தொட்டியில் பழைய காப்பர் கம்பி மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும். சகதியை மண்புழு உரத்திற்காக எடுத்தவுடன் மீதமிருக்கும் குழம்புவை தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு கலந்து விடலாம்.
🍁 தீவனப்புல்லுக்கு செல்லும் தண்ணீரில் மினரல் குறைபாடு இருப்பதால் தான் மாடுகள் சினைப்பிடிப்பில் கோளாறுகள் வருகின்றன. மேலும் நல்ல இயற்கை தீவனங்களை நாம் சாகுபடி செய்து தருவதன் மூலம் சினைப்பிடிப்பில் உள்ள கோளாறுகளை தவிர்க்கலாம்.
🍁 இதை நாம் முயற்சி செய்து பார்த்தால் பஞ்சகாவ்யா, மூலிகை பு+ச்சி விரட்டி, மண்புழு உரம், கோபர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்றவற்றை பெற்று, பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயனடையலாம்.
🍁 எனவே இப்போது இருந்து நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை சேமித்து வைத்து இயற்கை வளத்தை பாதுகாப்போம்.
Comments
Post a Comment