Posts

பார்த்தீனியம் நச்சு செடி...!

பார்த்தீனியம் நச்சு செடி...! 🍃 இந்த நச்சு செடி எல்லா விதமான சு+ழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன் உடையது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இது விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் நச்சு ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்த நச்சு செடியை ஒழிக்கும் முறையை பற்றி இன்றைக்கு பார்ப்போம். தன்மை : 🍃 இந்த நச்சு செடி முதலில் தரிசு நிலங்களில் பரவி இருந்தது. தற்போது விளை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது.  🍃 இந்த நச்சு செடி ஆண்டிற்கு 3 முறை வளரும் தன்மை உடையவை. சுமார் 10,000 விதைகள் ஒரு செடியில் இருந்து உற்பத்தி ஆகின்றது. இந்த விதைகள் அனைத்தும் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. விதைகள் மண்ணில் நீண்ட காலம் வரை பாதிப்படையாமல் இருக்கும். கால்நடைகள் : 🍃 கால்நடைகள் பார்த்தீனிய செடிகளை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகள் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.  🍃 எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும...

கால்நடைகளுக்கான தீவன செலவை குறைக்கும் முறை | How to reduce the cost of fodder for livestock in tamil .

கால்நடைகளுக்கான தீவன செலவை குறைக்கும் முறை !! How  to reduce  the  cost  of fodder for livestock  in tamil !! ★  கால்நடை வளர்ப்பு விவசாயத்துடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் தற்போது பசுக்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ★ அவர்கள் பசுந்தீவனத்துக்கு அதிக அளவில் செலவிடும் நிலையில், தீவனச் செலவுகளை பல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு. அதே போல் கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக்கு பல வகைகளில் உதவியும் புரிகிறது. விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது. ★ மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின் அளவில் சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், தீவனச் செலவு பெருமளவு குறையும். அதை பற்றி இங்கு காண்போம்.  கால்நடைகளை பேணி காக்கும் முறை : ★ விவசாயிகள் பேணி காக்கும் கலப்பின கால்நடைகளுக்கு சமச்சீரான சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது. இதை குறைப்பதற்கு உ...

கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!! How ketosis occurs in dairy cows in tamil!!

Image
கறவைப் பசுக்களுக்கு கீட்டோசிஸ் நோய் ஏற்படும் விதம்!! How ketosis occurs in dairy cows in tamil!! Mr Animal Care, ◆ கீட்டோசிஸ் என்பது மாவுச்சத்து (சர்க்கரை சத்து) பற்றாக்குறை நோய். ◆ கன்றை ஈன்றதும் பசு நிறைய பால் கொடுக்கிறது. பாலில் சர்க்கரை வெளியாகிறது. ◆ இரத்தத்தில் போதுமான சர்க்கரை இல்லாது போனால் உடம்பிலுள்ள கொழுப்பு ஜீரணிக்கப்படுகிறது. ◆ கொழுப்பு ஜீரணம் ஆகும் பொழுது அசட்டோன் என்னும் கழிவுப் பொருள் இரத்தத்தில் கலக்கிறது. ◆ இந்த அசட்டோனை கல்லீரல் உடம்பை விட்டு வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும் பொழுது கீட்டோசிஸ் நோய் ஏற்படுகிறது. ◆ கன்று ஈன்ற 20-30 நாட்களில் இந்நோய் ஏற்படும். ◆ சர்க்கரை நோயாளிக்கு வருகின்ற கீட்டோசிஸ் நோய் போன்றது தான் இந்த கீட்டோசிஸ். ◆ பாதிக்கப்பட்ட பசுவிற்கு அடர் தீவனத்தில் (கலப்பு தீவனம்) நாட்டமிருக்காது. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் சாப்பிடும். பாதிப்பு அதிகமாகும் பொழுது, அமிலத்தன்மை அதிகமாகிறது. ◆ பால் குறையும். பசி குறையும். வெறும் வாயை அசைத்து பொய் அசைபோடும். ◆ பொய் அசைபோடும் பொழுது நுரையுடன் உமிழ் நீர் வெளியாகும். ◆ தொடர்ந்து உடம்பை நக்கிக் கொண்டிருக்கும். இரை...

கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள் | Information about the cow in tamil,

கர்ன்சி மாடு பற்றிய தகவல்கள்..!  Information about the cow  in tamil, மாடு இனங்கள் (Cow breeds) :  ◆  தற்போது கால்நடை வளர்ப்பு என்பது அனைவரும் செய்துவரும் தொழில் எனலாம். அந்த கால்நடைகளில் நாட்டு மாடு, கலப்பின மாடு மற்றும் அயல் நாட்டு மாடு என பல வகைகள் உள்ளன. அந்த வகையில் அயல் மாட்டினமான கர்ன்சி மாடு பற்றி இன்றைய பதிவில் காணலாம். ◆  கர்ன்சி மாடு இனங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை ஆகும். எனவே தான் அந்த மாடுகள் கர்ன்சி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ◆ இந்த மாட்டின் பாலில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது அவற்றின் பாலில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. ◆ இந்த பீட்டா கரோட்டின் சத்து புற்றுநோயினை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாடுகளின் பால் பொன்னிறத்தில் இருக்கும். ◆ இம்மாட்டினங்களின் பாலில் 5 சதவீத அளவு கொழுப்புச்சத்தும், 3.7 சதவீத அளவு புரதச்சத்தும் உள்ளது. ◆ கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. ◆ இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்கிறது. ◆ மேலும் கன்று ஈனுவதிலும் சற்று குறைவான சிரம...

கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! Animal Question - Answers

கால்நடை சம்பந்தப்பட்ட கேள்வி - பதில்கள்..! Animal Question - Answers . ❓ கால்நடைகளின் புண்களில் ஈ புழுக்கள் எவ்வாறு உன்டாகின்றது?  ★ ஈயின் இனப்பெருக்கத்தின் ஒரு நிலைதான் ஈ புழு. பசுவின் மூக்கு, வாய், கண், முகம், பிறப்புறுப்பின் வாய் ஆகியவற்றில் கசியும் சளி போன்ற பசை நீரைக் குடித்து ஈக்கள் வாழ்கின்றன. ★ காயங்களிலும், புண்களிலும் ஈக்கள் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து 24 மணி நேரத்தில் ஈ புழுக்கள் வெளிவருகின்றன. ★  கன்று ஈனும் பொழுது கால்நடைகளின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் காயங்களிலும், கீறல்களிலும் புழுப்புண் ஏற்படும். ★ ஈ புழுக்கள் புண்ணை துளைத்து சதையை உண்ணுகின்றன. சில சமயம் எலும்பு வரைத் துளைத்து சதையே இல்லாமல் செய்துவிடும். பிறந்த கன்றுகளில் கொப்புழ் புழு புண் சாதாரணமாக ஏற்படுகிறது.  ★ 4-6 நாட்கள் சதையை உண்டு வாழும். அதன் பின் கூட்டுப்புழுவாகத் தரையில் விழுந்துவிடும். ❓ மாட்டிற்கு (கருப்பை) அடி தள்ளுவதற்கான காரணங்கள் என்ன? ★  சத்துக்குறைவான பசுக்களில் அடி தள்ளுகிறது. இடுப்பு தசைகள் (இடுப்புக் கட்டு) பலவீனமாக இருக்கும் பொழுதும் அடி தள்ளும். ★ நஞ்சுக் கொடியை போட...

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை !! Herbal treatment for dairy cows in tamil. Mr Animal Care, மடிவீக்க நோய் ( Flatulence)  : சிகிச்சை முறை : ★  கறவை  மாடுகளுக்கு பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல், கோமாரி வாய்ப்புண், விஷக்கடி போன்றவை ஏற்படலாம். அதற்கான இயற்கை முறை சிகிச்சைகள் பற்றி இங்கு காண்போம். மடிவீக்க நோய் ( Flatulence)  : ★  மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி மூலமாகவே ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடையதாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். சிகிச்சை முறை : ★  மடிவீக்க நோய்க்கு சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் போன்றவை தேவைப்படும். ★ மேற்குறிப்பிட்ட மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து, பின் ஒரு கை அளவு எடுத்து, அதை நீர் விட்டு கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவிவிட வேண்டும். இவ்வாறு பூசிவர மடிவீக்கம் விரைவில் குணமடையும். வயிறு உப்புசம் : ★  கால்நடைகளில் வயிறு உப்புசம் என...

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!

Image
சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !! திரு அனிமல் கேர், 🍁 நாட்டு மாடு வளர்க்கும் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது இல்லை. 🍁 அதை விட விலை மதிப்பில்லா பொருட்களை கால்நடைகள் தருகின்றன. அது தான் சாணம் மற்றும் கோமியம். அவற்றை எப்படி சேமிப்பது என்று பார்ப்போம். நாம் செய்ய வேண்டியவை : 🍁 பால் பண்ணை அமைக்கும் போது சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும். 🍁 பின்னர் சாணமும், கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்க வேண்டும். 🍁 நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் கோமியத்தை கம்பி வலை அமைத்து பிரித்து எடுத்து பஞ்சகாவ்யா மற்றும் இயற்கை பு+ச்சிகொல்லி மருந்து செய்து பயன்படுத்தலாம். 🍁 அதே போல் சாணத்தை கோபர் வாயுவாக தயாரிக்க பயன்படுத்தலாம். ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும். அதிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்கவும் முடியும். 🍁  சாணத்தை வைத்து நாம் கோபர் வாயு தயாரித்த பின், மிச்சம் உள்ள சாணத்தை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதனால் நமக்கு இயற்கை...